பெரு நாட்டில் சாலை விபத்து; 8 பேர் உயிரிழப்பு
பெரு நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
லிமா,
பெரு நாட்டின் தெற்கே அரிகுயிபா நகரில் கெய்லோமா மாகாணத்தில் இருந்து பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து உள்ளது. இந்த நிலையில், பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 2 வாகனங்களின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் சான் ஜுவான் டி டியோஸ் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்பு உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 பேர் உள்ளனர். மற்றவர்கள் கோயனிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story