காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல்


காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல்
x
தினத்தந்தி 21 Nov 2021 4:14 PM GMT (Updated: 21 Nov 2021 4:14 PM GMT)

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல் நடத்தி 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.



கின்ஷாசா,

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தெற்கு கிவு பகுதியில் சீன தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில், மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதற்கு ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனினும், ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.  மற்றொரு வீரர் காயமடைந்து உள்ளார்.  இதன்பின்னர், 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.


Next Story