ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல் - 4 பேர் பலி


ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல் - 4 பேர் பலி
x

ஈராக்கில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

பாக்தாத்,

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ரஷியா, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு அரசுப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் வீழ்ந்தனர். 

ஆனாலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சில குழுக்கள் ஈராக்கின் ஒருசில பகுதிகளில் மறைந்திருந்து அவ்வப்போது பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கின் பஸ்ரா நகரில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதியில் இன்று வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈராக் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story