பெல்ஜியம்: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
பெல்ஜியமில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
பிரஸ்சல்ஸ்,
உலகம் முழூவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரசை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் கொரோனா மற்றும் ஒமைரான் பரவலை கருத்தில் கொண்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் பிரஸ்சல்சில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story