துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு


துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு
x

துருக்கியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இஸ்தான்புல்,

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.


Next Story