இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய இளையோர் அணி 388 ரன்கள் குவிப்பு


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய இளையோர் அணி 388 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2017 10:45 PM GMT (Updated: 23 Feb 2017 7:44 PM GMT)

இந்தியா – இங்கிலாந்து இளையோர் (19 வயதுக்குட்பட்டோர்) அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நாக்பூரில் நடந்து வருகிறது.

நாக்பூர்,

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 375 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3–வது நாளான நேற்று 9 விக்கெட்டுக்கு 388 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. சவுரப் சிங் (109 ரன்) சதம் அடித்தார். 13 பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


Next Story