சூதாட்ட தரகரின் வேண்டுகோளை நிராகரித்த பாகிஸ்தான் கேப்டன்
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
துபாய்,
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகி மேட்ச் பிக்சிங் குறித்து பேசியுள்ளார். அவரது வேண்டுகோளை உடனடியாக மறுத்த சர்ப்ராஸ் அகமது நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் வெளியில் செல்வதற்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்ப்ராஸ் அகமது சம்பவத்தை உடனடியாக புகாராக தெரிவித்ததால் அவர் மீதான மரியாதை அதிகரித்து இருக்கிறது.
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகி மேட்ச் பிக்சிங் குறித்து பேசியுள்ளார். அவரது வேண்டுகோளை உடனடியாக மறுத்த சர்ப்ராஸ் அகமது நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் வெளியில் செல்வதற்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்ப்ராஸ் அகமது சம்பவத்தை உடனடியாக புகாராக தெரிவித்ததால் அவர் மீதான மரியாதை அதிகரித்து இருக்கிறது.
Related Tags :
Next Story