தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களை ஹர்திக் பாண்டியா மிரட்டுவார்- ராகுல் டிராவிட்


தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களை ஹர்திக் பாண்டியா  மிரட்டுவார்-  ராகுல் டிராவிட்
x
தினத்தந்தி 28 Dec 2017 12:22 PM GMT (Updated: 28 Dec 2017 12:22 PM GMT)

பவுலிங்கில் தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரட்டும் தகுதி பாண்டியாவுக்கு உள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #hardikpandya #cricket #indvssa


தென் ஆப்ரிக்கா சுற்றுபயணம்  மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3  20  ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 
இதில் பங்கேற்க கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் தென் ஆப்ரிக்கா புறப்பட்டனர். 

இந்நிலையில், தென் ஆப்ரிக்க ஆடுகளத்துக்கு ஏற்ப இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

பவுலிங்கில் தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரட்டும் தகுதி பாண்டியாவுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா தொடருக்கு செல்லும் முன்பு கோலி செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார். எனது வாழ்க்கையின் முக்கியமான தருணத்துக்காக ஓய்வு எடுத்தேன். தற்போது கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவதில் எனக்கு எவ்வித சிக்கலும் இல்லை. சில நாட்கள் பயிற்சி செய்தாலே நான் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார்.

Next Story