சுரேஷ் ரெய்னா துணிச்சலாக அடித்து ஆடக்கூடியவர்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்


சுரேஷ் ரெய்னா துணிச்சலாக அடித்து ஆடக்கூடியவர்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்
x
தினத்தந்தி 3 March 2018 9:51 AM GMT (Updated: 3 March 2018 9:51 AM GMT)

சுரேஷ் ரெய்னா துணிச்சலாக அடித்து ஆடக்கூடியவர் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். # RaviShastri #SureshRaina

மும்பை,

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா (வயது 31). மிகச்சிறந்த பீல்டரும் பகுதி நேர பந்து வீச்சாளருமான சுரேஷ் ரெய்னா, ஒரு வருடத்திற்கு பிறகு அண்மையில் நடந்து முடிந்த  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணியில் இடம் பெற்றார். 

தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட சுரேஷ் ரெய்னா, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் அபார  பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால், இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடும் அணியில் ரெய்னாவுக்கு மீண்டும் கிடைத்தது. 

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், சுரேஷ் ரெய்னாவை வெகுவாக புகழ்ந்துள்ளார்.  இது குறித்து ரவிசாஸ்திரி கூறும் போது, “ சுரேஷ் ரெய்னா நல்ல அனுபவம் கொண்டவர். அனுபவத்தால் என்ன செய்ய முடியும் என்பதை சுரேஷ் ரெய்னா விளையாடி காட்டினார். 

சுரேஷ் ரெய்னாவிடம் எனக்கு அதிகம் பிடித்தது அவரது அச்சமற்ற அணுகுமுறைதான். பொதுவாக, ஒருவர் நீண்ட காலம் கழித்து அணிக்கு திரும்பினால், கிடைத்த இடத்த தக்க வைக்கும் நோக்கிலேயே அவர் விளையாடுவார். இவ்வாறு விளையாடுவதே கூடுதல் அழுத்தத்தை அளிக்கும். ஆனால், சுரேஷ் ரெய்னா,  ஒருபோதும் இவ்வாறு விளையாடவில்லை. சுரேஷ் ரெய்னா விளையாட்டை பார்ப்பது சிறப்பாக இருந்தது” இவ்வாறு தெரிவித்தார். 


Next Story