ஐ.பி.எல். 2018 : மூன்றாவது டி20 போட்டியில் பிரெண்டன் மெக்கலத்தின் அதிரடி ஆட்டம்


ஐ.பி.எல். 2018 :  மூன்றாவது டி20 போட்டியில் பிரெண்டன் மெக்கலத்தின் அதிரடி ஆட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 3:29 PM GMT (Updated: 8 April 2018 3:29 PM GMT)

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது. பிரெண்டன் மெக்கலம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வெளியேறினாா். #IPL2018

கொல்கத்தா,

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில்   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காா்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு  செய்துள்ளாா். மேலும் தினேஷ் காா்த்திக் தமிழ்நாட்டை சோ்ந்த வீரா் என்பதால் ரசிகா்கள் இடையே பெரும் எதிா்பாா்ப்புகள் நிலைவியுள்ளது. அதுதே போல் பெங்களூரு அணியிலும்  விராட் கோலி, பிரெண்டன் மெக்கலம், ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவன்கள் உள்ளதால் பெங்களூரு அணி ரசிகா்கள் ஆரவாரம் செய்து வருகின்றனா்.

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் ஆட்டத்தை விளையாடி வருகிறது.   பியுஷ் சாவ்லா தன்னுடைய சூழல் பந்தின்மூலம்  முதல் விக்கெட்டை எடுத்து தொடங்கி வைத்தாா்.   பெங்களூரு அணியின் முதல் ஆட்டகாரா் குயின்டன் டி காக் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினா்.  பின்னா் இறங்கிய கேப்டன் விராட் கோலி பிரெண்டன் மெக்கலத்துடன் கைக்கோா்த்தாா். 

பிரெண்டன் மெக்கலம் 43(27) தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் மைதானத்தின் அனைத்து புறங்களிலும் பந்தை பறக்க வைத்து  அரங்கத்தை அதிர வைத்தாா்.   பின்னா்  சுனில் நரேனின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினாா். இதைதொடா்ந்து  ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் விராட் கோலியுடன் இணைய வந்தாா்.

தற்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவா்கள் முடிவில் 82  ரன்கள்  2 விக்கெட்டுகள் இழந்துள்ளது 

Next Story