தூக்கத்தில் இருந்த நண்பரின் காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிரிக்கெட் வீரர்


தூக்கத்தில் இருந்த நண்பரின் காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிரிக்கெட் வீரர்
x
தினத்தந்தி 8 Jan 2019 7:02 AM GMT (Updated: 8 Jan 2019 7:02 AM GMT)

தூக்கத்தில் இருந்த நண்பரின் காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிரிக்கெட் வீரர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் ஆப்பில் குழு ஒன்றை தொடங்கி தாங்கள் பாலுறவு கொள்ளும் பெண்கள் குறித்து மதிப்பெண் போடும்  விளையாட்டின் ஒரு பகுதியாக, தூங்கும் இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இங்கிலாந்து  கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்கி உள்ளார்..

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஹெப்பர்ன்  இங்கிலாந்தின் வர்செஸ்டர்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடும் ஆல் ரவுண்டர். ஒரு நாள் குடிப்பதற்காக வெளியே சென்ற அலெக்ஸ்  அறைக்கு திரும்பியபோது அங்கு ஒரு பெண் படுக்கையில் இருப்பதைக் கண்டிருக்கிறார். அவரை அலெக்ஸ்  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததும் தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண் எழுந்து அவரைத் தள்ளி விட்டு விட்டு கதறிக் கொண்டே வெளியே ஓடியிருக்கிறார்.

நடந்தது இதுதான், அந்த பெண் அலெக்சின்  அறை தோழரான ஜோய் கிளர்க் உடன் வந்த பெண். ஜோயும்  அந்த பெண்ணும் சற்று முன்னர்தான் படுக்கையை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மது அருந்தியதால் வாந்தி வரவே எழுந்து பாத்ரூமுக்கு சென்றிருக்கிறார் ஜோய். அந்த நேரத்தில்தான் அலெக்ஸ் தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணை துஷ்பிரயோகம்  செய்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டுள்ள அலெக்ஸ்  போடும் விளையாட்டின் ஒரு பகுதியாகவே அவர் அந்த பெண்ணை துஷ்பிரயோகம்  செய்ததாக தெரிய வந்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அலெக்ஸ்  அந்த பெண்ணின் சம்மதத்தின் பேரிலேயே உறவு கொண்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை  நடைபெற்று வருகிறது.

Next Story