9 ரன்களுக்கு ஆல் அவுட்; ஒரே ஓவரில் இலக்கை எட்டி மிசோராமை வெற்றி கண்டது மத்திய பிரதேசம்


9 ரன்களுக்கு ஆல் அவுட்; ஒரே ஓவரில் இலக்கை எட்டி மிசோராமை வெற்றி கண்டது மத்திய பிரதேசம்
x
தினத்தந்தி 22 Feb 2019 8:46 AM GMT (Updated: 22 Feb 2019 8:46 AM GMT)

20 ஓவர் போட்டியில் மிசோரம் அணியை 9 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி மத்திய பிரதேச அணி சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி பால்மைரா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில்  மிசோரம்- மத்திய பிரதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மிசோரம் அணி, 13.5 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. மேலும் மத்திய பிரதேசத்தின் அபாரமான பந்துவீச்சால், மிசோரம் அணியில் 9 பேர் ரன் எடுக்காமலேயே  டக் அவுட் ஆகினர்.

10 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய மத்திய பிரதேசம் ஒரே ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியது.

Next Story