இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா முழுமையாக வெல்லுமா? - கடைசி போட்டி இன்று நடக்கிறது


இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா முழுமையாக வெல்லுமா? - கடைசி போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 27 Feb 2019 11:00 PM GMT (Updated: 27 Feb 2019 8:27 PM GMT)

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா, முழுமையாக வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

மும்பை,

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி முன்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது. சிறப்பான பார்மில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக வெல்லுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story