ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 25 March 2019 2:59 PM GMT (Updated: 25 March 2019 6:29 PM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் இன்று, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 4-வது லீக் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உத்தேசமாக, 

ரஹானே (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜெயதேவ் உனதிகட், வருண் ஆரோன், தவல் குல்கர்னி,  ஆர்ச்சர், ஐஷ் சோதி, சாம்சன், ராகுல் திரிபாதி, ஷிரியாஸ் கோபால், கே கௌதம், மனன் வோரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் உத்தேசமாக,

அஸ்வின் (கேப்டன்), கிறிஸ் கெயில், ராகுல், சாம் கர்ரன், நிக்கோலஸ் பூரன், மயங்க் அகர்வால், ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரூ டை, முஜிப்புர் ரஹ்மான், டேவிட் மில்லர், கருன் நாயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Next Story