ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 25 March 2019 4:31 PM GMT (Updated: 25 March 2019 6:30 PM GMT)

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் இன்று, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 4-வது லீக் போட்டி தொடங்கியது.

இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. 20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்க்கு 184 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். சர்ஃப்ராஸ் கான் 46 ரன்கள், மயங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில், ஸ்டோக்ஸ் 2 விக்கெட், குல்கர்னி கௌதம் தலா 1 விக்கெட்  விழ்த்தினர்.

இதனையடுத்து, ராஜஸ்தான் அணி 185 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story