உலக கோப்பை அணியில் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது - கவாஸ்கர் கருத்து


உலக கோப்பை அணியில் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது - கவாஸ்கர் கருத்து
x
தினத்தந்தி 15 April 2019 11:03 PM GMT (Updated: 15 April 2019 11:03 PM GMT)

உலக கோப்பை அணியில் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ரிஷாப் பான்ட் நல்ல பார்மில் இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி அதற்கு முந்தைய போட்டிகளிலும் பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார்.


Next Story