துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 4 May 2019 11:06 PM GMT (Updated: 4 May 2019 11:06 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.


* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மொகாலியில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘இந்த சீசனில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் நாங்கள் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) மெச்சும்படி செயல்படவில்லை. ‘பவர்-பிளே’யில் மோசமாக ஆடியதே நிறைய ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது’ என்றார்.

* மும்பை 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனார். அவரை ஆகாஷ் டைகர்ஸ் அணி வாங்கியது.

Next Story