டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்ஸ் 182 ரன்கள் குவிப்பு


டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்ஸ் 182 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 22 July 2019 3:37 PM GMT (Updated: 22 July 2019 3:37 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும்  மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான 5-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி வலுவான தொடக்கத்தை அமைத்தனர். இதில் அரைசதம் அடித்த ஹரி நிஷாந்த் 57 ரன்களில் கேட்ச் ஆனார். 

அடுத்து வந்த ஆர்.அஸ்வின் 16 ரன்னிலும், விவேக் 2 ரன்னிலும், சதுர்வேத் 1 ரன்னிலும், சுமந்த் ஜெயின் ரன் எதுவும் எடுக்காமலும், முகமது 13  ரன்னிலும்  என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். 

இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில், தொடர்ந்து பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த  ஜெகதீசன் 87 ரன்களுடனும், ரோஹித் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதுரை பாந்தர்ஸ் அணியில் ரஹில் ஷா 3 விக்கெட்டுகளும், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகளும், கவுசிக்  1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

Next Story