டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நெல்லை,
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.
இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதி சுற்றில் ஆடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக்கில் காஞ்சி வீரன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை அணி தீவிரம் காட்டும்.
Related Tags :
Next Story