கொழும்பு டெஸ்ட் கிரிக்கெட்: தனஞ்ஜெயா, லாதம் சதம் அடித்தனர்


கொழும்பு டெஸ்ட் கிரிக்கெட்: தனஞ்ஜெயா, லாதம் சதம் அடித்தனர்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:15 PM GMT (Updated: 24 Aug 2019 9:06 PM GMT)

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.

கொழும்பு, 

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதல் இரண்டு நாட்கள் மழையால் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. 9 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த தனஞ்ஜெயா டி சில்வா தனது 5-வது சதத்தை (109 ரன், 148 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) எட்டினார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்த தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 111 ரன்களுடன் (184 பந்து, 10 பவுண்டரி) களத்தில் உள்ளார். கேப்டன் வில்லியம்சன் 20 ரன்னில் கேட்ச் ஆனார். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Next Story