ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து 301 ரன்களில் ஆல்-அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 301 ரன்கள் எடுத்துள்ளது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதில் அபாரமாக ஆடிய ஸ்மித் 211 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராடு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரோரி பர்ன்ஸ் 81 ரன்னும், ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சில் 196 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சில் தேநீர் இடைவெளியின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது.
Related Tags :
Next Story