இந்திய தேர்வு குழு பதவியில் நீடிக்குமா?


இந்திய தேர்வு குழு பதவியில் நீடிக்குமா?
x
தினத்தந்தி 24 Oct 2019 11:02 PM GMT (Updated: 24 Oct 2019 11:02 PM GMT)

இந்திய தேர்வு குழு பதவியில் நீடிக்குமா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கிரிக்கெட் வாரியத்தின் முந்தைய விதிமுறைப்படி பார்த்தால் தேர்வு குழுவின் பதவி காலம் அதிகபட்சம் 4 ஆண்டுகள் தான். அதை எம்.எஸ்.கே. பிரசாத் குழுவினர் நிறைவு செய்து விட்டனர். ஆனால் திருத்தப்பட்ட புதிய விதிமுறைப்படி தேர்வு குழு அதிகபட்சம் 5 ஆண்டுகள் பொறுப்பில் இருக்க முடியும். இதன்படி அவர் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தொடரலாம். தேர்வு குழுவினரின் பதவி காலம் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி விரைவில் முடிவு எடுக்க உள்ளார். அனேகமாக தற்போதைய தேர்வு குழுவினர் மாற்றப்படுவார்கள் என்றே தெரிகிறது.

Next Story