20 ஓவர் கிரிக்கெட்: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி ‘சாம்பியன்’


20 ஓவர் கிரிக்கெட்: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 18 Jan 2020 11:24 PM GMT (Updated: 18 Jan 2020 11:24 PM GMT)

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்கள் கல்லூரிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள ஆர்.கே.எம். மைதானத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவா-பாரதி பெண்கள் கல்லூரி அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாரதி கல்லூரி அணி, எம்.ஓ.பி.வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 11 ஓவர்களில் 17 ரன்னில் சுருண்டது. பின்னர் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அணி 1.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை கமலி ஆட்டநாயகி விருது பெற்றார்.

Next Story