முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; நியூசிலாந்துக்கு 348 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா


முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; நியூசிலாந்துக்கு 348 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
x
தினத்தந்தி 5 Feb 2020 5:54 AM GMT (Updated: 5 Feb 2020 5:54 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 ரன்களை குவித்தது.

ஹாமில்டன்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.   இப்போட்டியில் டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 103 ரன்களும், லோகேஷ் ராகுல் 88 ரன்களும் ( 64 பந்துகள், 3 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) அடித்தனர். கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் அடித்தார்.   இதையடுத்து 348  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story