பள்ளி கிரிக்கெட்: செயின்ட் ஜான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


பள்ளி கிரிக்கெட்: செயின்ட் ஜான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 21 Feb 2020 10:37 PM GMT (Updated: 21 Feb 2020 10:37 PM GMT)

பள்ளி கிரிக்கெட் போட்டியில் செயின்ட் ஜான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையை அடுத்த சந்தோஷ்புரத்தில் உள்ள சுமங்கலி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் பி.வி.எம்.குளோபல்-செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் பள்ளி அணிகள் மோதின. முதலில் ஆடிய பி.வி.எம். குளோபல் அணி 25 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது. பின்னர் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய செயின்ட் ஜான்ஸ் அணி 10.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சஞ்சய் 50 ரன்னுடனும், அக்‌ஷயா ராகுல் 35 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இறுதிப்போட்டியில் செயின்ட் ஜான்ஸ் அணி, வேல்ஸ் வித்யாஷ்ரம் அணியை எதிர்கொள்கிறது.

Next Story