இந்திய தொடரில் இருந்து ரபடா விலகல்


இந்திய தொடரில் இருந்து ரபடா விலகல்
x
தினத்தந்தி 29 Feb 2020 11:53 PM GMT (Updated: 29 Feb 2020 11:53 PM GMT)

இந்திய தொடரில் இருந்து தென்ஆப்பிரிக்கா வீரர் ரபடா விலகி உள்ளார்.

கேப்டவுன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, இந்தியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் (மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை) இருந்து விலகியிருக்கிறார்.இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் என்று தென்ஆப்பிரிக்க மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே வருகிற 29-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடருக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரபடா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.






Next Story