இந்திய வீரரின் முதல் முச்சதம்: நினைவூட்டிய ஐ.சி.சி.
இந்திய வீரர் சேவாக்க் அடித்த வரலாற்றின் முதல் முச்சதம் குறித்து ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
துபாய்,
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் யார் என்றால், அது முன்னாள் அதிரடி சூரர் ஷேவாக் தான். 2004-ம் ஆண்டு முல்தானில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 39 பவுண்டரி, 6 சிக்சருடன் 309 ரன்கள் (375 பந்து) குவித்து உலக சாதனை படைத்தார்.
அவர் முச்சதம் நொறுக்கிய நாள் மார்ச் 29-ந்தேதி. அதை நேற்று நினைவூட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேவாக் புகைப்படத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பதிவிட்டுள்ளது. ஷேவாக்கின் முச்சதத்தால் அந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. சரியாக அடுத்த 4 ஆண்டுகளில் இதே மார்ச் மாதம் சென்னையில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஷேவாக் (42 பவுண்டரி, 5 சிக்சருடன் 319 ரன்) மீண்டும் ஒரு முச்சதத்தை விளாசியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story