பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறும்; ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை


பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறும்; ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை
x
தினத்தந்தி 8 Aug 2020 10:29 PM GMT (Updated: 8 Aug 2020 10:29 PM GMT)

பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மெல்போர்ன்,

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.

மெல்போர்னை உள்ளடக்கிய விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி நேற்று அளித்த பேட்டியில், ‘ஆஸ்திரேலிய விளையாட்டு அட்டவணையில் ‘பாக்சிங் டே’ போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மைதானத்துக்குள் ரசிகர்களை அனுமதிக்க முடியும் என்றால் நிச்சயம் மெல்போர்னிலேயே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடைபெறும். இந்த போட்டிக்கு இன்னும் 4½ மாதங்கள் உள்ளன. அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.


Next Story