ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்?


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்?
x
தினத்தந்தி 12 Nov 2020 11:02 PM GMT (Updated: 12 Nov 2020 11:02 PM GMT)

அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொரோனா காலத்திலும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும், புதிய அணிக்கான டெண்டர் விவரம் தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் அணியை வாங்க நடிகர் மோகன் லாலும், பைஜூஸ் நிறுவனமும் போட்டியிடுவதாக மற்றொரு தகவல் கூறுகிறது. ஆனால் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை கூடுதல் அணி இணைந்தால், அடுத்த ஆண்டு வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story