இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி


Image courtesy : Twitter
x
Image courtesy : Twitter
தினத்தந்தி 27 Jan 2021 10:02 AM GMT (Updated: 27 Jan 2021 10:02 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார். 48 வயதான கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு  ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 சவுரவ் கங்குலிற்கு ஆபத்தில் இல்லை என்றும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குணமடைவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story