கங்குலிக்கு மீண்டும் ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை


கங்குலிக்கு மீண்டும் ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை
x
தினத்தந்தி 29 Jan 2021 12:51 AM GMT (Updated: 29 Jan 2021 12:51 AM GMT)

கங்குலிக்கு மீண்டும் ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டு இரண்டு ‘ஸ்டன்ட்’ பொருத்தப்பட்டது.

கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான 48 வயதான சவுரவ் கங்குலிக்கு நேற்று முன்தினம் மீண்டும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த 3 அடைப்புகளில் ஒன்று ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள இரு அடைப்புகளை சரி செய்ய ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டு இரண்டு ‘ஸ்டன்ட்’ பொருத்தப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும், கங்குலி சுயநினைவுடன் பேசுவதாகவும் கூறினார்.

Next Story