ரூ.145 கோடிக்கு வீரர்கள் விற்பனை


ரூ.145 கோடிக்கு வீரர்கள் விற்பனை
x
தினத்தந்தி 19 Feb 2021 2:50 AM GMT (Updated: 19 Feb 2021 2:50 AM GMT)

சென்னையில் நேற்று நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் ரூ.145 கோடியே 30 லட்சத்துக்கு வீரர்களை வாங்கின.

சென்னையில் நேற்று நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் இடம் பெற்றிருந்த 292 வீரர்களில் இருந்து 57 வீரர்கள் மட்டும் விலை போனார்கள். இதில் 22 வெளிநாட்டவரும் அடங்குவர். இவர்களை 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் ரூ.145 கோடியே 30 லட்சத்துக்கு வாங்கின.

ஏலம் போகாத வீரர்களில் ஆரோன் பிஞ்ச், லபுஸ்சேன், மேத்யூ வேட் , அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா), ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலஸ் (இங்கிலாந்து), ஹனுமா விஹாரி (இந்தியா), டேரன் பிராவோ, காட்ரெல் (வெஸ்ட் இண்டீஸ்), டிம் சவுதி, காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து), வான்டெர் துஸ்சென் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

Next Story