7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும் புஜாரா


7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும் புஜாரா
x
தினத்தந்தி 19 Feb 2021 3:01 AM GMT (Updated: 19 Feb 2021 3:01 AM GMT)

7 ஆண்டுக்கு பிறகு இந்திய வீரர் புஜாரா ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார்.

ஐ.பி.எல். ஏலத்தில் இந்திய வீரர் புஜாராவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்டதால் தொடர்ந்து ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்த புஜாரா 7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார். 

கடைசியாக அவர் 2014-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்று இருந்தார். ஏற்கனவே பஞ்சாப், பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். 30 ஐ.பி.எல். ஆட்டங்களில் 390 ரன்கள் சேர்த்துள்ளார்.

Next Story