சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார்.
சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார். ஜெர்சியை அறிமுகப்படுத்திய டோனி, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க என கூறி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறுகிறது.
புதிய தோற்றம் கொண்ட ஜெர்சியில் இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, மிகவும் விரும்பப்படும் உரிமையாளரின் சின்னத்தில் மூன்று நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன" என்று சிஎஸ்கே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.Thala Dharisanam! #WearOnWhistleOn with the all new #Yellove! #WhistlePodu 💛🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2021
🛒 - https://t.co/qS3ZqqhgGepic.twitter.com/Gpyu27aZfL
ஆயுதப் படைகளின் குறிப்பிடத்தக்க மற்றும் தன்னலமற்ற பங்கைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்து நீண்டகாலமாக மனதில் இருந்து வந்தது. அவர்கள் உண்மையான ஹீரோக்கள் அவர்களின் சேவையைப் பாராட்டுவதாகும் ”என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறினார்.
Related Tags :
Next Story