ஒருநாள் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி


ஒருநாள் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி
x
தினத்தந்தி 2 Sep 2021 9:15 PM GMT (Updated: 2 Sep 2021 9:15 PM GMT)

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

கொழும்பு, 

இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. 

இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்தது. தனது 3-வது சதத்தை எட்டிய தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 118 ரன்களும் ( 115 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), சாரித் அசலன்கா 71 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியால் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மார்க்ராம் 96 ரன் சேர்த்து கேட்ச் ஆனார். இதன் மூலம் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story