அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மலிங்கா


அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மலிங்கா
x
தினத்தந்தி 14 Sep 2021 2:55 PM GMT (Updated: 14 Sep 2021 2:55 PM GMT)

டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளாரக வலம் வந்த மலிங்கா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து 2019- ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். இந்த நிலையில், டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  மலிங்கா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மலிங்கா தனது யூ டியூப் சேனலில் அதிகாரபூர்வாக தெரிவித்திருக்கிறார்.

ஓய்வு குறித்து மலிங்கா கூறுகையில், “ இன்று நான் 20 -20 போட்டிகளுக்கு நிரந்தரமாக ஓய்வை அளிக்க முடிவு செய்திருக்கிறேன். 20- 20 கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அணிக்கும் அணியில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Next Story