களத்திற்குள் வந்தவுடன் சிக்சருக்கு ஆசைப்பட வேண்டாம் ; சஞ்சு சாம்சனுக்கு கவாஸ்கர் அறிவுரை


களத்திற்குள்  வந்தவுடன் சிக்சருக்கு ஆசைப்பட வேண்டாம் ; சஞ்சு சாம்சனுக்கு கவாஸ்கர் அறிவுரை
x
தினத்தந்தி 24 Sep 2021 6:01 AM GMT (Updated: 24 Sep 2021 6:01 AM GMT)

களத்திற்குள் வந்தவுடன் சிக்சருக்கு ஆசைப்பட வேண்டாம் என சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.

துபாய்                              
         
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.  துபாயில் கடந்த 21-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை ராஜஸ்தான் வீழ்த்தியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார்.
     
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர்

 'ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் களத்திற்குள் வந்ததுமே சிக்சர் அடிக்க முயல்வதை மாற்றிக் கொள்ள வேண்டும். அணியின் கேப்டன் என்ற பொறுப்புடன் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 

ஷாட்டுகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். சில பந்துகளை எதிர்கொண்டு  ரன்களை ஓடி எடுத்த  பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பிக்கலாம்' என அறிவுரை கூறியுள்ளார்.

Next Story