அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களுக்கு நன்றி: டேவிட் வார்னர் உருக்கம் ..
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார் .
அபுதாபி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெறற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இந்த போட்டியில் மும்பை அணியிடம் 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.இந்த போட்டி இந்த சீசனில் ஐதராபாத் அணியின் கடைசி போட்டி ஆகும்.
இது குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார்
அந்த பதிவில் அவர் கூறியதாவது
அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களாகிய உங்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இது ஒரு சிறந்த பயணம் என்று பதிவிட்டுள்ளார் .
செப்டம்பர் 25 அன்று ஐதராபாத் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் . அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
Related Tags :
Next Story