உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Oct 2021 2:32 PM GMT (Updated: 18 Oct 2021 2:32 PM GMT)

இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

துபாய்,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது வரும் 24-ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி இன்று தன்னுடைய முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி இங்கிலாந்து அணியானது முதலில் விளையாடி வருகிறது.


Next Story