டி வில்லியர்ஸ் ஓய்வு குறித்து அஸ்வின் டுவீட்டரில் கருத்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Nov 2021 3:34 PM GMT (Updated: 20 Nov 2021 3:34 PM GMT)

டி வில்லியர்ஸ் ஓய்வு குறித்து அஸ்வின் டுவீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். 

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வந்த அவர், சில தினங்கள் முன்பு அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தன்னுடைய டுவீட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

டி வில்லியர்ஸ் ஓய்வு முடிவு குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் தனது கருத்தினை தன்னுடைய டுவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "உங்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்த்துக்கள் ஏபி டி வில்லியர்ஸ். இத்தனை வருடங்களாக நீங்கள் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருந்தது, மேலும் உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கட்டும்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.


Next Story