ஆமதாபாத், லக்னோ அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்-யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Jan 2022 7:23 PM GMT (Updated: 21 Jan 2022 7:23 PM GMT)

ஆமதாபாத், லக்னோ அணிகள் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள 3 வீரர்கள் விவரத்தை நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

புதுடெல்லி,  

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள ஆமதாபாத், லக்னோ அணிகள் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள 3 வீரர்கள் விவரத்தை நேற்றிரவு அதிகாரபூர்வமாக அறிவித்தன. 

இதன்படி ஆமதாபாத் அணி இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (ரூ.15 கோடி), ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (ரூ.15 கோடி), இந்திய பேட்ஸ்மேன் சுப்மான் கில் (ரூ.8 கோடி) ஆகியோரையும், லக்னோ அணி நிர்வாகம் இந்தியாவின் லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (ரூ.9.2 கோடி), இந்திய உள்ளூர் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரையும் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளன.


Next Story