சச்சின் மற்றும் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த குல்தீப் யாதவ்..!!


Image Courtesy :  IPL / AFP
x
Image Courtesy : IPL / AFP
தினத்தந்தி 29 April 2022 10:56 AM GMT (Updated: 29 April 2022 10:56 AM GMT)

நேற்று குல்தீப் யாதவ் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 5 போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவி உள்ளது. 

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். நேற்று நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றதன் மூலம் அவர் நடப்பு சீசனின் 5-வது ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

இதன் மூலம் அவர் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் சச்சின் (2010), ரோகித் சர்மா (2016), ருதுராஜ் (2021), அமித் மிஸ்ரா (2013), யூசப் பதான் (2008) ஆகியோரோடு 2-வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி (2016) 5 ஆட்டநாயகன் விருதுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Next Story