கேப்டனை மாற்றிய மும்பை அணி.....சென்னை அணிக்கு அடித்த லக்..!


கேப்டனை மாற்றிய மும்பை அணி.....சென்னை அணிக்கு அடித்த லக்..!
x

மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரோகித் சர்மா ரசிகர்களால் ஏற்க முடியவில்லை.

சென்னை ,

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியபோதே, அவர் ரோகித் சர்மாவின் இடத்தை பிடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், நேற்று அறிவிப்பு வெளியானது.

இதனால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இணையதளங்களில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் 13.2 மில்லியனாக இருந்த `பாலோயர்ஸ்' எண்ணிக்கை தற்போது 12.7 மில்லியனாக குறைந்துள்ளது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் அணிகளில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட அணியாக சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி 13 மில்லியன் பாலோயர்ஸை கொண்டிருக்கிறது.

எக்ஸ் தளத்திலும் (10.1 மில்லியன்)அதிக பாலோயர்ஸ்களை கொண்ட அணியாக சென்னை அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story