ஆசிய கோப்பை கால்பந்து: சென்னையின் எப்.சி.–நேபாளம் கிளப் இன்று மோதல்


ஆசிய கோப்பை கால்பந்து: சென்னையின் எப்.சி.–நேபாளம் கிளப் இன்று மோதல்
x
தினத்தந்தி 16 April 2019 9:15 PM GMT (Updated: 16 April 2019 8:35 PM GMT)

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தென் மண்டல குரூப் சுற்று பிரிவில் மொத்தம் 36 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஆமதாபாத், 

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தென் மண்டல குரூப் சுற்று பிரிவில் மொத்தம் 36 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஐ.எஸ்.எல். போட்டியில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த போட்டி தொடரில் சென்னையின் எப்.சி., தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா கண்டது. இந்த நிலையில் சென்னையின் எப்.சி.–மனங் மார்ஷ்யாங்டி கிளப் (நேபாளம்) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.


Next Story