சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா அபார வெற்றி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா அபார வெற்றி
x
தினத்தந்தி 2 May 2019 9:53 PM GMT (Updated: 2 May 2019 9:53 PM GMT)

இந்த சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டி இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது.

பார்சிலோனா,

இந்த சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டி இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. இதில் பார்சிலோனா (ஸ்பெயின்)- லிவர்பூல் (இங்கிலாந்து) ஆகிய அணிகளுக்கு இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. லூயிஸ் சுவாரஸ் (26-வது நிமிடம்), லயோனல் மெஸ்சி (75, 82-வது நிமிடம்) கோல் அடித்தனர். இதன் மூலம் பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த கோல்களின் எண்ணிக்கை 600-ஆக உயர்ந்தது.

இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதில் பார்சிலோனா ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம்.

Next Story