ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை அணி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை அணி
x
தினத்தந்தி 11 Jan 2020 12:06 AM GMT (Updated: 11 Jan 2020 12:06 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத்தை 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வீழ்த்தியது.

ஐதராபாத்,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஐதராபாத்தில் அரங்கேறிய 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யுடன் மோதியது. பந்து அதிகமான நேரம் ஐதராபாத் (56 சதவீதம்) வசம் சுற்றிக் கொண்டிருந்தாலும் ஷாட் அடிப்பதில் சென்னை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 40-வது நிமிடத்தில் ரபெல் கிரிவெல்லாரோவும், 43, 65-வது நிமிடங்களில் வல்ஸ்கிஸ்சும் கோல் அடித்து சென்னை அணிக்கு வலுவான முன்னிலை ஏற்படுத்தி தந்தனர். 88-வது நிமிடத்தில் ஐதராபாத் வீரர் மார்செலினோ ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. ஐதராபாத் அணிக்கு இது 9-வது தோல்வியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை சிட்டி-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Next Story