பாலியல் புகார்: கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் சஸ்பெண்ட்


பாலியல் புகார்: கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 26 May 2020 8:50 AM GMT (Updated: 26 May 2020 8:50 AM GMT)

பாலியல் புகார் தொடர்பாக கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சூரிச்

விளையாட்டு பயிற்சி மையத்தில் இளம் பெண் வீரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணையில் இருக்கும் போது ஹைட்டியின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜுன்-பார்ட்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து  எப்ஐஎப்ஏ கூறுகையில்,

அதன் நெறிமுறைகுழு ஆய்வாளர்கள் ஜூன் பார்ட்டை 90 நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜுன் பார்ட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடந்த மாதம் இங்கிலாந்து நாளேடான தி கார்டியன் வெளியிட்டன.

20 ஆண்டுகளாக கூட்டமைப்பை வழிநடத்திய ஜூன் பார்ட் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.


Next Story