ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 30 Nov 2020 11:27 PM GMT (Updated: 30 Nov 2020 11:27 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-கவுகாத்தி ஆட்டம் டிராவில் (சமனில்) முடிந்தது.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தின. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 40-வது நிமிடத்தில் கவுகாத்தி அணி வீரர் இட்ரிசா சைலா கோல் அடித்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. உடனடியாக கோவா அணி பதில் கோல் திருப்பியது. 43-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பிரன்டன் பெர்னாண்டஸ் கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் இகோர் அன்குலோ கோல் வளையத்துக்குள் திணித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. பிற்பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் (சமனில்) முடிந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-ஈஸ்ட் பெங்கால் அணிகள் சந்திக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story