ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி
கோவா அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது .
கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் கோவா -ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின
இந்த ஆட்டத்தில் 51 வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் நெரிஜஸ் வால்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 முன்னிலை பெற்றது .தொடர்ந்து ஜாம்ஷெட்பூர் அணியில் நெரிஜஸ் வால்ஸ்கிஸ் 61 வது நிமிடத்திலும் ,ஜோர்டன் முர்ரே 80 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர் .
கோவா அணியில் ஐராம் கப்ரேரா 86 வது ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெற்றது
Related Tags :
Next Story