ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 2-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 2-வது வெற்றி
x
தினத்தந்தி 29 Nov 2021 11:27 PM GMT (Updated: 29 Nov 2021 11:27 PM GMT)

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

கோவா, 

11 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. 

ஒரு கட்டத்தில் ஆட்டத்தில் 1-1 என்று சமநிலை நீடித்த நிலையில், 74-வது நிமிடத்தில் சென்னை கேப்டன் அனிருத் தபா, பின்கள வீரர்களை ஏமாற்றி அருமையாக கோல் அடித்து அசத்தினார். சென்னை அணி தனது 3-வது லீக்கில் ஈஸ்ட் பெங்காலை வருகிற 3-ந்தேதி எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் (இரவு7.30மணி) மோதுகின்றன.

Next Story